கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.
எனினும், அதன் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆகையால், நாளைய தினம் திட்டமிட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் இன்று (04) காலை 11.30க்கு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று நடத்தப்படுகிறது. அதன்போதே தீர்மானிக்கப்படும்.



