உயர்நீதிமன்ற வியாக்கியானம் இன்னும் இல்லை: நாளை துறைமுக நகர சட்டமூல விவாதம் இல்லை?

Date:

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.

எனினும், அதன் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஆகையால், நாளைய தினம் திட்டமிட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் இன்று (04) காலை 11.30க்கு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று நடத்தப்படுகிறது. அதன்போதே தீர்மானிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்