Pagetamil
இந்தியா

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

நடைபயிற்சிக்கு தனியாக சென்றதால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கொடுத்தவர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நடைபயிற்சிக்கு தனியாக சென்றார். இதனால் அந்தப் பெண்ணின் 31-வயது கணவர் கோபம் அடைந்தார். இத்தகவலை மாமனாரிடம் போனில் தெரிவித்த கணவர் , முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணின் கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம், மிரட்டல் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!