சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Date:

ஹட்டன் இலங்கை போக்குவரத்துசபை பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சிறுநீர் கழித்த இ.போ.ச பேருந்து சாரதியை ஆட்சேபித்த, பேருந்து நிலைய கடை உரிமையாளரை அடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (28) மாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் இ.போ.ச டிப்போவின் சாரதி ஒருவர் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சிறுநீர் கழித்தமை தொடர்பில் கடை உரிமையாளர் சாரதியிடம் சென்று, பேருந்து நிலைய பகுதியில் அதிகளவான மக்கள் சுற்றித்திரிவதாக தெரிவித்தார். மேலும் பேருந்து நிறுத்தம், பொது இடங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளுக்கு வருவதால் இந்த பகுதியில் சிறுநீர் கழிப்பது சரியல்ல என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த சாரதியால், உரிமையாளர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பின்னர், அவ்விடத்திற்கு வந்த  மற்றுமொரு இ.போ.ச சாரதி கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த கடை உரிமையாளர் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹட்டன் இ.போ.ச டிப்போவின் சாரதிகள் இருவர் கடை உரிமையாளரை தாக்கும் காட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்