ஃபெங்கால் புயல் இன்று கரையை கடக்கிறது!

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கால்” என்ற சூறாவளி புயல் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.

இது இன்று (30) பிற்பகலில் புயலாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-55) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம்...

விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில்...

‘தென் மாநிலங்களுக்கு மாபெரும் வரலாற்று அநீதி’ – கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின்

“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்