பாகிஸ்தான் வாழ்கவென கோசமெழுப்பியவர் இந்திய கொடியை வணங்க உத்தரவு

Date:

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு தேசியக் கொடிக்கு 21 முறை வணக்கம் தெரிவிக்குமாறும், பாரத் மாதா கீ ஜே என்று கூறுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் ஃபைசல் நஸர். இவர் அண்மையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத், இந்தியா முர்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக) என்று கோஷங்களை எழுப்பினார்.

இதையடுத்து ஃபைசல்கைது செய்யப்பட்டு ஜபல்பூரிலுள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ரூ.50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், போபாலில் உள்ள மிஸ்ராட் போலீஸ் நிலையத்துக்கு ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஃபைசல் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதித்தது. அதுமட்டுல்லாமல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும் முன்னர் அங்குள்ள தேசியக் கொடியை 21 முறை வணங்க வேண்டும் என்றும், பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நேற்று மிஸ்ராட் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஃபைசல் 21 முறை தேசியக் கொடியை வணங்கினார். பின்னர் பாரத் மாதா கீ ஜே என்றும் கோஷம் எழுப்பினார். அப்போது ஃபைசல் கூறும்போது, “பாரத மாதாவை நான் வணங்குகிறேன். என்னுடைய தவறை நான் ஒப்புக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு கையெழுத்திடுவேன். இந்தத் தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன். இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்வேன்‘‘ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்