எதிர்வரும் பொதுத் தேர்தலிற்கான தபால் மூல வாக்காளர்களின் வாக்குச் சீட்டுகள் இன்று (23) விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தபால் மூல வாக்குகள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளை கையகப்படுத்தி உடனடியாக சான்றளிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்குகள் பதிவானது இம்மாதம் 30, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நாட்களிலும் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.




