சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

Date:

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திரும்பப் பெறப்பட்டதாக சஜித் தெரிவித்திருந்தது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தல்துவ தெரிவித்துள்ளார். ஆனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், போதியளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்