வவுனியா வாள்வெட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.

குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பல குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த ஜனாதிபதி செயலக அதிகாரி

பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் அரசு அனுமதி மறுப்பு

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று...

கலாபக்காதலனுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கும் விளக்கமறியல்!

அம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர், நுவரெலியாவில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்