மட்டக்களப்பு மறைமாவ்டத்தின் புதிய ஆயராக கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஆயரின் கலாநிதி ஜோசப் பொன்னையா அந்த பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, இந்த புதிய நியமனத்தை வத்திக்கான் வழங்கியுள்ளது. ஜோசப் பொன்னையாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதுடன், புதிய ஆயர் நியமிக்கப்பட்டதக வத்திக்கானின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி அன்டன் ரஞ்சித் தற்போது வரை கொழும்பு உதவி ஆயராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




