யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நீண்டகாலத்துக்கு முன்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பெண்ணொருவர், பத்து வருடங்களின் முன்னர் சத்திரசிகிச்சை மேற்கொண்ட பின்னர், நடமாடும் திறனை இழந்திருந்தார்.
ஆயுர்வேத சிகிச்சையால் குணமடையலாமென நம்பி யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு வெளியானது. உயிரிழந்த 62 வயதான பெண், கொரோனா தொற்றினால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.




