டிப்பர் வழிமறிக்கப்பட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட சாரதி: வவுனியாவில் நடுவீதியில் கொடூரம்!

Date:

வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அந்த பகுதியில் நின்றவர்கள், குரல் எழுப்பியபடி உதவிக்கு ஓடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் தமது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திருநாவற்குளம் மைதானத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. ஒருவர் மீது குழுவொன்று கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த வீடியோ வெளியாகியிருந்தது.

தாக்குதலாளிகள் கைது செய்யப்படவில்லையென மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், வவுனியா எம்.பி திலீபன் தலையிட்டதையடுத்து, பொலிசார் சிலரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, இன்றைய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்