வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடக்கில் இன்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 660 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் 2 பேர், கரவெட்டி, கோப்பாய், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்