மஸ்கெலியா, முர்ரே தோட்டத்தில் குளவி தாக்கியதில் தோட்டத்தில் பணியாற்றிய ஆறு தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (28) மாலை முர்ரே தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை. அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



