29.4 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் மொட்டு கட்சியினரை மோப்பம் பிடிக்கும் புலனாய்வுதுறை!

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணையவுள்ளனரா என்பதை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன்  இணைவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இது தொடர்பில் ஆராய பெரமுன பிரமுகர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்களையும்  புலனாய்வு அதிகாரிகள் பின்தொடர்வதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இவ்வாறான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சில பிரமுகர்களுடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதால், புலனாய்வு பிரிவினர் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்யுங்கள்: புலம்பெயர் தமிழர்களிற்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

Pagetamil

16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் கைது செய்யப்படுவார்

Pagetamil

மஹிந்த காலத்தை மிஞ்சும் அதிகார ஆட்டம்; யாழில் ஜேவிபி அமைச்சரின் தலைகால் புரியாத பேச்சு: முன்னாள் தவிசாளர் நிரோஷ் பதிலடி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!