இலங்கை கிரிக்கெட் அணிக்கு 3 வடிவங்களிலும் தனித்தனி கப்டன்கள்!

Date:

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு, இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 அணிகளுக்கான தலைமை பொறுப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கப்டனாக நியமிக்கப்படுவார். குசல் மெண்டிஸ் துணை கப்டன் பதவியை ஏற்கிறார்.

ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கப்டனாகவும், சரித் அசலங்க துணை கப்டனாகவும் செயல்பட உள்ளனர். ரி20 வடிவத்தில், வனிந்து ஹசரங்க கப்டனாகவும், சரித் அசலங்க துணை கப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பான இறுதி முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தெரிவுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆராயப்படும்.

இந்த முக்கியமான சந்திப்பின் போது அந்தந்த வடிவங்களுக்கான கப்டன் பொறுப்புகள் குறித்தும் குழு உறுதியான முடிவை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...

சவூதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்களால் பல எரிசக்தி நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டது

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால், அந்நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் ஒரு...

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்