புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Date:

வான்பாயும் போது குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுக்கும் வகையில்
தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் புதுமுறிப்புக் குளத்தில் நேற்றைய
தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பருவமழைக்கு குளம் நிரம்பி வான்பாயும் போதும் பெருமளவு
மீன்கள் குளத்திலிருந்து வெளியேறி விடுகின்றன இதன்காரணமாக நன்னீர் மீன்
பிடி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தமையினை கருத்தில் எடுத்து
வான்கட்டு பகுதியில் தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அதிகாரசபையின்
பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் மற்றும் அவர்களது குழுவினர்,
புதுமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இணைந்து
இ்ப் பணியை மேற்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்