29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
மலையகம்

பெண்ணின் சொத்து பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு சொந்தமாக, கண்டி குண்டசாலை மஹவத்தை பகுதியில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டசாலை பிரதேச செயலாளர் சுவீகரித்துள்ளார்.

சொத்துக்களை சம்பாதித்த விதம் தொடர்பில் குறித்த பெண் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு தெளிவான தகவல்களை வழங்கத் தவறியதால், மேல் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த மூன்று மாடிக் கட்டிடத்தையும் காணியையும் குண்டசாலை பிரதேச செயலாளரின் கீழ் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, குண்டசாலை பிரதேச செயலாளரின் முறையான அனுமதியின்றி உரிமையாளருக்கு சொத்தை மாற்றவோ, விற்கவோ அல்லது வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது.

பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், உரிய சொத்தை செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்க, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment