எரிபொருள் நிரப்பு நிலையத்தை நீதிமன்றம் தடை செய்ததற்கான காரணம்!

Date:

முல்லேரிய, அம்பத்தல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதனை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அம்பத்தல புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் இடையில் 400 மீற்றர் தூரமே உள்ளதாகவும் மேலும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இடையிலான நிலையான தூரத்தை விட குறைவான தூரம் எனவும் சங்கம் கூறுகிறது.

இதன்படி, பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடிய போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்