முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இளைஞன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23 வயதான இளைஞன் மீதே நாட்டு துவக்கு (இடியன்) கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது.
இதன் போது குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாலிநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் 23 என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்
இதேவேளை நேற்று இரவு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும் மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், வாள்வெட்டுக்கு இலக்கான தரப்பினர், பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவ இடத்திற்கு வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு பணித்தார்.
-ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்-




