27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

மனைவியை கொன்றுவிட்டு 2 வருடங்களாக சாமியாராக சுற்றித்திரிந்தவர் கைது!

மனைவியை கொலை செய்து விட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாணி என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவுதம், ஹரிஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேக மடைந்த ரமேஷ் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரை கொலை செய்து விட்டு, தலை மறைவானார். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவரை போலீஸார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ரமேஷ் சாமியாராக மாறி கோயில்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், ரமேஷ், டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் செல்ல இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை, ரயில் நிலையம் அருகே வந்த ரமேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment