27.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
மலையகம்

காதலனுடன் விடுதிக்கு சென்ற யுவதி சடலமாக மீட்பு!

இறக்குவானை, பனாவல பகுதியிலுள்ள விடுதி அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

இறக்குவானை பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதியொருவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இறக்குவானை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனும், அவரது காதலி என்று கூறப்படும் 22 வயதுடைய இந்த பெண்ணுடன், முச்சக்கரவண்டியில் ரக்வான, பனாவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று அங்கு அறை ஒன்றை பதிவு செய்து தங்கியுள்ளனர்.

யுவதியை அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு கொண்டு வருவதற்காக இளைஞன் வெளியே சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது யுவதி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டதாக பொலிஸாரிம் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

 

யுவதி தனது ஆடையின் ஒரு பகுதியை பயன்படுத்தி குளியலறையில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இளைஞர் விடுதியின் ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, ஊழியர்களின் உதவியுடன் கஹவத்தை வைத்தியசாலைக்கு யுவதி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினம், ஏற்கெனவே யுவதி உயிரிழந்திருந்தார்.

 

யுவதி தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல் இடம்பெற்றதா என்பதை அறிய பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment