25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

7 குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றவர் மீது 48 வழக்குகள்

மும்பையைச் சேர்ந்த நபர் ஸ்கூட்டரில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ ருவிட்டரில் வைரலானது. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரண்டு குழந்தைகளும், பின்பக்கத்தில் மூன்று குழந்தைகளும், மேலும் இரண்டு குழந்தைகள் நின்றுகொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அந்த ருவிட்டர் பயனாளர் “பொறுப்பற்ற பித்துப்பிடித்த நபர் ஏழு குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். ஏழு குழந்தையின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார்.

அதை பார்த்த மும்பை போக்குவரத்து காவல் துறையினர், குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.

நகரத்தில் சிறிய தேங்காய்க் கடை வைத்திருக்கும் முனவ்வர் ஷா என்பவரே கைதாகினார். ஸ்கூட்டரில் பயணித்த ஏழு குழந்தைகளில், நான்கு பேர் அவரது பிள்ளைகள். மீதமுள்ள மூன்று குழந்தைகளும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

மேலும், அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment