24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் பெண்கள் அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரத்திற்கு வருகின்றனர்: முன்னாள் எம்பி சந்திரகுமார்

இலங்கையை பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின்
மறைவுக்கு பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு
வந்துள்ளனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும் பெண்களின் அரசியல்
அதிகாரங்களுக்கு ஆளுமையின் ஊடாக பிரவேசிக்க வேண்டும் என முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (18) வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின்
சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

உலகில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என நாம்
பெருமைப்பட்டுள்கொள்கின்றோமே தவிர அரசியில் பெண்களுக்கு போதுமான
வாய்ப்புக்களை வழங்குவதற்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை. ஒரு சில
இஸ்ஸாமிய நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள
வாய்ப்புக்கள் போன்று கூட இலங்கயைில் வழங்கப்படவில்லை என்பது
கவலைக்குகரியது. இலங்கையின் வாக்காளர்களில் அதிகளவில் பெண் வாக்காளர்கள்
உள்ள போது இந்த வாய்ப்பு மறுப்பு என்பது தொடர்ச்சியாக காணப்படுகிறது.
எனத் தெரிவித்த அவர்

எங்களுடைய சமத்துவக் கட்சியை பொறுத்தவரை பெண்களுக்கு நாம் அதிக
முக்கியத்துவம் கொடுத்த கட்சியாக காணப்படுகின்றோம். உள்ளுராட்சி
மன்றங்களில் கூட அதிகளவில் எங்களுடைய கட்சி பெண்களே உறுப்பினர்களாக
உள்ளனர். நாம் கட்சியின் பெயரில் மாத்திரம் சமத்துவத்தை
கொண்டிருக்கவில்லை செயற்பாடுகளிலும் அதனை நிரூபித்துள்ளோம் எனவும்
குறிப்பிட்டார்.

சமத்துவக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜாக்குவின் லூசியா
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment