தெரணியகல பிரதேசசபை தலைவர் கைது!

Date:

தெரணியகல பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் மீட்டர் தவறாக இடப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, அவிசாவெல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.

கும்புகுமமவில் 477 நீர் மீட்டர் மற்றும் பிற உபகரணங்கள் திருடப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஒரு திட்டத்தின் பொறியாளர் புகார் அளித்ததாக டிஐஜி கூறினார், அதைத் தொடர்ந்து திட்டத்தின் உத்தியோகத்தர் மற்றும் சாரதி பல நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, தெரணியகல பிரதேச சபையின் தலைவரின் வசம் 98 திருடப்பட்ட நீர் மீட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்