தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் சேர்க்க ஆளும் தரப்பு இணங்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஒரு நாள் விவாதத்திற்கு அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடைபெற்றது.




