கட்டுக்கட்டாக ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம்: தன்னிடம் தரும்படி கேட்ட கோட்டாபய; நீதிமன்றம் நிராகரிப்பு!

Date:

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற செயற்பாட்டாளர்களினால் மீட்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாவை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) நிராகரித்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 431வது பிரிவின்படி, அத்துடன் இலஞ்ச ஊழல் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பணம் குறித்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று கூறி மனுவை நீதவான் நிராகரித்தார். .

இந்த பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், குறித்த பணத்திற்கு வேறு யாரும் உரிமை கோராவிட்டாலும் பணத்தை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் நீதவான் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, பணத்திற்கு வேறு எந்த தரப்பினரும் உரிமை கோராத காரணத்தினால் பணத்தை தனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு கோரியிருந்ததை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்