நான் அவனில்லை: ஒரு பெண்ணால் நடந்த கொலை!

Date:

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி விளையாட்டரங்கில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் மற்றுமொரு கொலையில் சந்தேக நபர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு மருதானை பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கி கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் வளர்ந்த சந்தேக நபர் இரண்டு பெயர்களில் தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் புனித சில்வெஸ்டர் மைதானத்தில் பாதுகாவலருடன் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவங்க நாணயக்கார என்றழைக்கப்படும் வசந்த குமார திலகரத்ன கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்