அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டனர்.
சுமார் 65 முதல் 70 வரையிலான வயது மதிக்கத்தக்க ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டது. அவர் கொலைசெய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமடைந்தாா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தனியார் கடைதொகுதியானது தனியார் வங்கியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் மரணமடைந்தவர் காவலாளியாக நியமிக்கப்பட்டவர் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய குறித்த சடலம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய குறித்த வங்கி நிருவாகத்தின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
-பா.டிலான்-




