IND vs SL: தொடர்ந்து 3 நோபோல் வீசிய முதலாவது இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்!

Date:

இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பந்துவீசும் இந்திய அணியின் பந்துவீச்சார் அர்ஷ்தீப் சிங் மோசமான சாதனையொன்றை படைத்துள்ளார்.

இந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் அவர் தொடர்ந்து 3 நோ போல்களை வீசினார்.

அர்ஷ்தீப் தனது ஓவரின் கடைசி பந்தில் தொடர்ந்து மூன்று நோ-போல்களை வீசினார், இப்படி பந்துவீசிய முதல் இந்திய பந்துவீச்சாளரானார்.

இந்த ஒரு பந்தில் அவர் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அர்ஷ்தீப் முதல் ஐந்து பந்துகளில் ஐந்து ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி பந்து நோ போல். ரன் இல்லை. அடுத்த பந்து ப்ரீ ஹிட். குஷால் மெண்டிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். இதுவும் நோ போல். அடுத்த ஃப்ரீ ஹிட்டும் நோ போல். மெண்டிஸ் அதை சிக்ஸருக்கு அடித்தார். இறுதியாக சிங்கிள் கிடைத்தது. மொத்தமாக இந்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது.

அர்ஷ்தீப்பின் ரி20 சர்வதேச வாழ்க்கையில் இது இரண்டாவது மோசமான ஓவராக மாறியுள்ளது. கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக 22 ரன்கள்கொடுத்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்