உலகின் முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு 30 வருடங்கள் நிறைவு!

Date:

உலகின் முதல் குறுஞ்செய்தி (text message) அனுப்பப்பட்டு நேற்று (3) 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இங்கிலாந்தில் வோடபோன் பொறியாளர் ஒருவர் அனுப்பிய  “மெர்ரி கிறிஸ்மஸ்” என்பதே கன்னி குறுஞ்செய்தியாகும்.

மென்பொருள் பொறியியலாளர் நீல் பாப்வொர்த் கிறிஸ்துமஸ் விருந்தில் இருந்த தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அனுப்பியதே, குறுஞ்செய்தி வரலாற்றின் தொடக்கமாகும்.

இன்று செய்திகள் வடிவத்தில் நிறைய மாறிவிட்டது. வட்ஸ்அப் போன்ற மெசஞ்சர் ஆப்களின் வருகையால் குறுஞ்செய்திகளை அனுப்புவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று, குறுஞ்செய்திகள் பெரும்பாலும் நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களால் அனுப்பப்படுகின்றன. இருப்பினும், குறுஞ்செய்தி அனுப்பும் பலர் உள்ளனர்.

இங்கிலாந்தில் 2021இல் நாளாந்தம் 4000 குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது 2012ல் உலகம் முழுவதும் 15,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் தினமும் 10,000 கோடி வட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்படுவதாக ஸ்டேடிஸ்டா தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்