26.2 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இந்தியா

‘காதலில் எல்லாமே நியாயம்தான்’: பாலினத்தை மாற்றிக் கொண்டு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர்!

காதலிலும், போரிலும் எல்லாமே நியாயமானவைதான் என சொல்லப்படுவதுண்டு. அப்படித்தான், இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவியுடனான காதலுக்காக தனது பாலினத்தை மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பாரத்பூரில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் இருந்தவர் மீரா. அதே பள்ளியில் பயின்று மாநில அளவில் கபடி வீராங்கனையாக சிறந்து விளங்கியவர் கல்பனா பவுஸ்தர். நாளாடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காதலி கல்பனாவை கரம் பிடிக்க தனது பாலினத்தை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டிருக்கிறார் மீரா.

”காதலில் எல்லாம் நியாயமே. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றினேன்” என்று கூறும் மீரா தன் பெயரை ஆரவ் குந்தல் என மாற்றிக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய மீரா, “நான் சிறு வயதிலிருந்து என்னை ஆணாக உணர்ந்திருக்கிறேன். ஆணாக வாழவே விரும்பினேன். இதற்கான முதல் சிகிச்சை 2019 ஆம் ஆண்டு செய்தேன்” என்றார்.

கல்பனா பேசும்போது, “நான் ஆரம்பம் முதலே அவரை விரும்பினேன். அவர் ஆணாக மாறவில்லை என்றாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன். 2019 பால்மாற்று அறுவை சிகிச்சைக்கு நானும் சென்றிருந்தேன்” என்றார்.

இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்திற்கு இணங்க சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஜனவரி மாதம் நடக்கவுள்ள சர்வதேச கபடி போட்டிக்காக கல்பனா டுபாய் செல்ல திட்டமிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!