27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

வெள்ளத்தில் கழிவுகளை வீசும் விசமிகள்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள நிலையில் , குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் , ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட வியடங்களில் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஷமிகள் அந்த ஒழுங்கைக்குள் கழிவுகளை கொட்டுவதனால் , பலத்த இன்னல்களை அப்பகுதிகளில் வசிப்போர் எதிர்நோக்கியுள்ளனர்.

வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவதானலும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பில் மாநகர சபை உள்ளிட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் , உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment