25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
மலையகம்

மாணவனை தாக்கிய மாணவர் தலைவர்கள் கைது!

கம்பளை, குருந்துவத்தை றோயல் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் மூன்று மாணவர் தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 18ஆம் திகதி காலை 10 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று (19) வெளியேறியுள்ளார்.சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸில் மாணவன் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தலைவர்கள் மூவரையும் கைது செய்து ‘பி’ அறிக்கை மூலம் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

மூன்று மாணவர்களையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் நீதவான் விடுவித்துள்ளார். அவர்களை அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment