ஹிக்கடுவ, வாரவிலவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி, 2200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏழு இலட்சம் ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹிக்கடுவ வாரவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் இருந்த இரணைவில பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் நாளை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




