வர்த்தக நிலையங்களில் பரிசோதனை

Date:

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பு மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களின் காலாவதி திகதி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கொரோனா பாதுகாப்பு தொடர்பில் சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் பரிசோதனை செய்யப்பட்டது.

நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்