மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம்: கோட்டா கால ‘சர்வதேச சிக்கலுக்குள்’ சிக்குகிறது ரணில், பெரமுன அரசு!

Date:

மக்கள் போராட்டக்காரர்கள் மீது ரணில், ராஜபக்ஷ அரசின் வேட்டைக்கு எதிராக இலங்கைக்குள்ளும், சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்களை வேட்டையாடுவது, மாணவர் போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம்-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாட்டிற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களை நாங்கள் குறிப்பிடுகிறோம். சமீபத்திய கைதுகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது பற்றிய அறிக்கைகள் குறித்து கவலையடைகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சுங்-

பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது. மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம்.

இலங்கைக்கான கனடா தூதர் டேவிட் மெக்கின்னன்-

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையில் உள்ள அதிகாரிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத வகையில் பரவலாகக் காணப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச –

பயங்கரவாத தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் மாணவர்களின் மற்றும் நமது நாட்டின் அடுத்த தலைமுறையினரின் குரலை நசுக்குவது கண்டிக்கத்தக்கது. மக்களைப் பாதுகாப்பதே அரசின் கடமை. மக்கள் நலன் மற்றும் ஜனநாயகத்தின் நலன் கருதி அரசு செயல்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசியலமைப்பின் கீழ்உள்ள சுதந்திரங்களின் கீழ் செயற்படும் எந்தவொரு பிரஜை மீதும் பயங்கரவாதியென பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஏற்புடைதல்ல என இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

எவரேனும்ஒருவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், அவருக்கு எதிரான சகல சாட்சியங்களையும் நீதிமன்றத்தின்முன்கொண்டு வர வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகிணி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்