கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

Date:

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்) பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன்றிணைத்த தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் மறைவுக்கு முன்னதாகவே, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை மற்றும் பொறுப்பு இதுவே என்று தெரிவித்த அவர், இந்த நோக்கத்தை அடைவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தனது கருத்துக்களை மேலும் பின்வருமாறு வெளிப்படுத்தினார்: “எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது; அதை நிறைவேற்ற நீங்கள் தயாரா? ரஜரட்ட மக்களே, நீங்கள் தயாரா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த நாட்டை ஒன்றிணைத்து, முழு நாட்டையும் மீளக் கட்டியெழுப்பிய அந்தத் தலைவருக்கு நாம் ஒரு கடமைப்பட்டிருக்கிறோம். பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்; ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உயிருடன் இருக்கும்போதே நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு நமக்கு உள்ளது; அதுதான் மக்களை ஒன்றிணைத்து நமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவது. அதுமட்டுமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாகும்.”

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்