முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

Date:

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து சக ஊழியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கைகளாலும் சோடா போத்திலாலும் தலையில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட றில்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தன்னை தாக்கியவர்களில், ஆளும் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகராக செயற்படும், இ.போ.ச ஊழியர் ஒருவரும் உள்ளதாகவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லையென்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகமோ,சாலை நிர்வாகமோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்