இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து சக ஊழியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கைகளாலும் சோடா போத்திலாலும் தலையில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட றில்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தன்னை தாக்கியவர்களில், ஆளும் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகராக செயற்படும், இ.போ.ச ஊழியர் ஒருவரும் உள்ளதாகவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லையென்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகமோ,சாலை நிர்வாகமோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.




