ரூ.09 மில்லியன் செலவில் காரைதீவு திருமால்முக வீதி புனரமைப்பு : தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் கள ஆய்வு

Date:

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு-07 திருமால்முக வீதியின் புனரமைப்புப் பணிகளை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார். டித்வா பேரிடர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 09 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வீதி புனரமைப்புப் பணிகள் காரைதீவு பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றன.

கடந்த கால வெள்ளப்பெருக்கினால் இப்பகுதி மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களின் வரிப்பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், புனரமைப்புப் பணிகள் அனைத்தும் உரிய தரநிலைகளுக்கு அமைவாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த தாமும் பிரதேச சபை அதிகாரிகளும் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி புனரமைப்பு நிறைவடைந்த பின்னர், குறித்த பகுதியில் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், எதிர்காலத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்