பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

Date:

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயதுடைய சிறுமியொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (13) வத்தேகம – யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் இருந்த போதே அச்சிறுமி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று சிறுமியைத் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியொன்றில் வந்த சிலர் காலை 7 மணியளவில் அச்சிறுமியை அப்பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியைக் அழைத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்