மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி: கல்முனை தலைமை பள்ளிவாசலுடன் மாளிகைக்காடு பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடல்

Date:

மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வரும் நிரந்தர மையவாடி பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) இரவு கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நிர்வாகத்தினரும், மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று விரிவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

மையவாடி வசதி என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை மத மற்றும் மனிதாபிமானத் தேவைகளில் ஒன்றாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை, இடப்பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு, மாளிகைக்காடு மக்களுக்கென நிரந்தரமான மாற்று மையவாடி ஒன்றை அமைப்பதற்கான அவசியம் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், அடையாளம் காணப்பட்ட பொருத்தமான காணிகளை சட்டரீதியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுதல், சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள், இவ்விடயம் எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தேவையாக அல்லாமல், முழு மாளிகைக்காடு சமூகத்தின் எதிர்கால நலனுடன் தொடர்புடைய பொதுநலக் காரியமாகக் கருதி, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல், ஸைத் பின் தாபீத் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.எச்.எம். முபாரிஸ், பொருளாளர் எஸ்.எம். றிப்னாஸ், உப செயலாளர் ஏ.எம். லத்தீப் மற்றும் நம்பிக்கையாளர்கள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை பிரதானிகள், அரசியல் கட்சிகளின் பிரதேச அமைப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், நிரந்தரத் தீர்வை விரைவாக எட்டுவதற்காக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நன்கொடையாளர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், இதற்கென ஒருங்கிணைந்த செயற்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணக்கப்பாடு எட்டியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்