EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

Date:

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு!! தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்புடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் குறித்த இரு நாட்களிலும் முன்னெடுக்கப்படமாட்டாது. இதற்கமைய, குறித்த இரண்டு நாட்களிலும் கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் இடம்பெறாது என்பதால், அந்த நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள அனைவரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்