ஏறாவூர் தவிசாளருக்கு எதிராக போராட்டம்

Date:

தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூறி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் தமிழரசுக் கட்சியின் நகர சபை உறுப்பினர் ரகுவரனால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தளவாய் வீட்டு திட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தனர்.

தங்களுக்கான வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, காட்டு பாதைகளை துப்பரவு செய்து தரவில்லை, வீதி விளக்குகள் போட்டு தரவில்லை என்றும் பல தடவைகள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஏறாவூர் பற்று தவிசாளரிடம் முறையிட்டும் அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் கலந்து கொண்டு இதற்கான தீர்வுகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தார்.

தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் நகர சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரான நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்