பைத்தியக்காரத்தனத்தை தாங்க முடியவில்லை: கஜேந்திரகுமார் சபாநாயகருக்கு கடிதம்!

Date:

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக, தமது இருக்கையை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 23 அன்று சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் அர்ச்சுனா தன்னைத் தொடர்ந்து வாய்மொழியாகத் திட்டி வருவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போதும், சமூக ஊடகங்களிலும் தனக்குத் தொடர்ந்து வன்முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு அருகில் இனிமேலும் அமர இயலாது என்றும், இது ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தனது கடமைகளை முறையாக ஆற்றுவதற்கான திறனைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் கஜேந்திரகுமார் கூறினார்.

சுயேச்சைக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு மத்தியில் ஓர் இருக்கையை ஒதுக்குவது வழக்கமான நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாரம்பரிய இருக்கை ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை அவையின் இடதுபுறத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்