இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

Date:

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் 26 வயதான மாணவி நதுனி சஹஸ்ரீ கூரே என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததால், கதவு உடைக்கப்பட்டு, சடலமும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் அருகில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்