இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

Date:

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் முதல் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இன்று (13) கண்டானையில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அருட்தந்தை கல்யாணபிரியா ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன், இலங்கையைச் சேர்ந்த ஒரு குருவும் நேபாளத்தைச் சேர்ந்த மூன்று குருமார்களும் உட்பட மொத்தம் நான்கு பேர் ஆயர்களாக அர்ச்சிக்கப்பட்டனர்.

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு வெளிநாட்டு ஆயர்களின் பங்கேற்புடன் இந்த திருநிலைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இது நிகழ்வின் சர்வதேச முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தியது.

வெளிநாட்டு மதகுருமார்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் விசுவாசிகள் என பெருமளவானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இலங்கையில் நடைபெற்றது இதுவே முதல் முறை என திருச்சபை நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன், இது நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு முக்கியமான வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு தீர்மானம் இதுவரையில்லை

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்  அதிகாரிகள், அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதம்...

சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் தமிழரசு கட்சி பிரதேச அமைப்பாளரின் வாகனம் சிக்கியது

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள்...

போதைப்பொருளுடன் சிக்கிய மொடல் அழகி

தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்