கணவன், பிள்ளைகளை கழற்றிவிட்டு வந்த பெண், காதலன் மீது நம்பிக்கைத்துரோக வழக்கு!

Date:

திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது.

யாழ்ப்பாண காதலனுக்காக, தனது கணவன், பிள்ளைகளை உதறிவிட்டு, ஓடி வந்த அந்தப் பெண், யாழ்ப்பாணத்தில் காதலனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களிலேயே காதலனுடனான உறவு கசந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தானும், காதலனும் உல்லாசமாக இருந்த சமயங்களில், இதை காதலன் படம்பிடித்து வைத்திருந்ததாகவும், அதை தற்போது தனது நண்பர்கள் வட்டாரங்களில் கசிய விட்டு, நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

காதலன் நம்பிக்கை மோசடி செய்ததாக குறிப்பிட்டு, அந்தப் பெண் தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் சட்டநடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்