யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா பதுளைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாவார்.
வடமாகாண ஆளுனர் உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பில் நியமித்த விசாரணைக்குழுக்கள் தொடர்பாக அவர் அண்மையில் வழங்கிய தீர்ப்பு, இந்த இடமாற்றத்திற்கு காரணமா என சமூக ஊடகங்களில் பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இந்த விமர்சனம் உண்மையானால், முன்னைய மஹிந்த காலத்தையொத்த யுகமொன்று உருவாகிவரும் அபாயத்தையும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.




