புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக மூன்று இளம் பெண்களை புத்தல பொலிசார் நேற்று முன்தினம்(10) கைது செய்தனர்.
அந்த மூன்று இளம் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், மோட்டார் சைக்கிளின் உரிமையாளரையும் மற்ற இரண்டு இளம் பெண்களையும் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் கொழும்பகேர, ஹிண்டிக்கிவுல மற்றும் உனவட்டுன பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.



