யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டனர்.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.



